அம்மா
மூச்சடக்கி ஈன்றாய்
என்னையே -என்
மூச்சுள்ளவரை காப்பேன்
உன்னையே!
------------------------------
அம்மா காட்டினாள்
நிலவை!
அழகாய் ஊட்டினாள்
உணவை!
அடடா !!
அமாவாசை முழுதும்
இரவாக,
அவளே மாறினாள்
நிலவாக!!
-------------------------------
பத்தியம் இருந்தாய்
பத்து மாதம் சுமந்தாய்
நான் பிறப்பதற்காக!
பட்டினி கிடந்தாய்
பாரம் சுமந்தாய்
நான் படிப்பதற்காக!
இன்னும் சுமப்பாய் நீ எனக்காக!
இறுதி ஊர்வலத்தில் நான்
உன்னை சுமக்கும் வரை!!

