நிஜமானதால்

காதலிக்கும் போது காதலித்ததை விட ...
கல்யாணத்திற்கு பிறகு காதல் கூடியது ....
காதல் நிஜமானதால் அல்ல .....
கல்யாணம் நிஜமானதால்....

காதலிக்கும் போது காதலித்ததை விட...
கல்யாணத்திற்கு பின் காதல் குறைந்ததோ...
கல்யாணம் நிஜமானதால் அல்ல...
கோபம் அதிகமானதால்...

காதலிக்கும் போது கோபப்பட்டதை விட...
கல்யாணத்திற்கு பின் கோபம் அதிகமானதோ...
கோபம் அதிகமானதால் அல்ல ..
காதல் அதிகம் ஆனதால்....

எழுதியவர் : சாமுவேல்... (8-Mar-14, 5:00 am)
பார்வை : 87

மேலே