துளி துளியாய் துள்ளும் காதல்

பனிக்கட்டி உலக்கையாக
எனது கைகள்.
காதலால் எனை
அவள் கைப்பற்றிய போது...!
----------------------------------------

கால தாமதமாய்
காதலிக்க சென்றுவிட்டேனாம்
ரோஜா பூங்காவில்
கண்ணகி ஆக்ரோஷத்தில்
என் மாதவி..!
----------------------------------------
என் இதழ்
தின்ற அவள் இதழ்
வெட்கப் புன்னகை பூத்தது
அய்யோ....! செத்தேன்...!
சொக்கி தவித்தேன்..!
----------------------------------------

ஏதுமற்ற காரணத்தோடு
அர்த்தமற்ற புன்சிரிப்புகள்
அர்த்தப்படுத்திய
அவள் விரல்களோடு
என் விரல்கள்
இருபாம்புகளாக
பிண்ணிப்பிணைந்து
கூடலின்ப ஒத்திகையில்..!
கோடி இன்பம் கனவுகளில்..!
----------------------------------------

பூவில் தேன் உண்டாம்
அறிவியலுக்கு அறிவே இல்லை
காதலியின் இதழ் கவ்விய
காதலனின் இதழில்
மொய்க்கிறது ஈக்கள்.
பாருங்கள்..! மேதாவிகளே..!
--------------------------------------------

உன்னருகே நானிருக்கும்
இக்கணம் மொழி
இலக்கணம் அறியா
கவிஞனாய் உன்
மேனி தாளில்
ஏதோ ஏதோ
கிறுக்க கிறங்குகிறது
என் விரல் எழுதுகோல்.

---------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (26-Mar-14, 2:58 am)
பார்வை : 246

மேலே