மனம் எனும் கொதிகலன்

அலைமோதும் எண்ணங்களின்
ஆர்ப்பாட்டத்தால்

தேடல்களில் ஏமாற்றங்கள் ..
தோல்விகளில் தாக்கங்கள் ....

வருத்தங்களின் பதிவுகள் ...
வலிகளால் வலிகள் ...

நிகழ் காலத்தின் தாக்கங்கள்
எதிர் காலத்தின் காயங்கள் ..

சலனமான எண்ணங்களினால்
சமுதாயத்தில் ஒதுக்கல்கள்...

மனம் கொதிகலனாய் செயல்பட்டு
பாளம் பாளமாய் வெடிப்புக்கள் ..

அமைதியை தொலைத்து
அணு அணுவாய் சிதையும் இக் கால கட்டத்தில்

மனதை கட்டுபாட்டுக்குள் வைக்க
மன அமைதியோடு வாழ விதி முறைகள் .....

"நீ சிரித்து பார்
உன் முகம் உனக்கு பிடிக்கும்

நீ மற்றவர்களை சிரிக்க வைத்து பார்
உன் முகம் மற்றவர்களுக்கு பிடிக்கும் "..

தேடல்கள் ....
வாழ்வின் அனுபவங்கள் ....

மகிழ்ச்சியான சுற்றுப்புறதிர்க்கு
மனம் எனும் கொதிகலனை

மிதமான தீயில் வைத்து
நேரத்தை நேர்மையாய் பயன்படுத்தி

விடா முயற்சியை தூண்டிலாக்கி
இலக்கை இலகுவாய் தொடுவோம்

இனிமையாய் செயல் படுவோம்

இன்று மட்டும் தான் இன்று
நாளை இன்று நேற்றாகி விடும் ....

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (26-Mar-14, 11:31 pm)
பார்வை : 96

மேலே