நினைவுகள் போதும்

மெல்லத் தலைகோதி
அள்ளியணைத் தெடுத்து
இருகக் கைபற்றி உன்
சுவாசம் படுதூரம் போதும்!

கள்ள விழியசைவில்
மௌன மொழி பேசி
என் மேனி சிலிர்க்க வைக்கும் உன்
கடைப் பார்வை ஒன்றே போதும்!

செவ்விதழ் சுழித்திங்கே
நாணமதில் ஏற்றி என்
சிந்தை கலங்கடிக்கும் உன்
மந்திரப் புன்னகையே போதும்!

சித்தம் செயல்கள் யாவும்
நித்தம் உன் நினைவே தான்
இப்புவியில் சொர்க்கம் கண்டேன் உன்
நினைவுகள் அது போதும்
நான் வாழ நாளும்!!!

எழுதியவர் : RajaRajeshwari (4-Apr-14, 2:41 pm)
Tanglish : ninaivukal pothum
பார்வை : 96

மேலே