தகதிமி தாளங்கள் - மணியன்

புருவங்களின் இடையினில்
துருவங்கள் இரண்டு. . .
பருவத்தின் வாசலில்
உருமாறும் செண்டு . . . .

இதயம் தடவிடும்
இதமான இறகுகள் . . .
உதயங்கள் தந்திடும்
உன்னதப் பார்வைகள் . . . .

நளினச் சிதறல்களில்
நர்த்தனக் கவிதைகள். . .
நினைவுக் கீற்றினில்
நின்றாடும் மின்னல்கள் . . . . .

நெஞ்சம் திறந்திடும்
நித்தியக் கனவுகள் . . .
நேர்முகப் பார்வையில்
நிறமாறும் நினைவுகள் . . . . . .

உறக்கத்தின் உள்நின்றும்
உள்ளாடும் கனவுகள் . . . .
உயிர்வரைக் கரைந்து
உறவாடும் நினைவுகள் . . . . . . .

படைத்திட்ட பிரம்மனின்
படபடப்பின் விளைவுகள் . . . .
தூரிகை சிந்திய
தூபமாய் மச்சங்கள் . . . . . . .

நடந்திடும் போதினில்
நசுங்கிடும் சிந்தையும்
தொடர்ந்திடும் வேளையில்
நிமிர்ந்திடும் நேர்த்திகள் . . . . . .

அவளில்லா நாளில்
ஆணென் வாழ்வுகள் . . .
அடர்ந்த கானகத்தில்
அலைந்திடும் சாரல்கள் . . . . .

இருந்தும் இல்லாமல்
இடையினில் வினோதங்கள். . . .
இதுவரை என்னில்
இனம்புரியாத் தேடல்கள் . . . . . .

என்னுள் ஏனிந்த
ஏகாந்தக் கிறுக்கல்கள் . . .
ஏட்டினைத் தொலைத்தும்
எழுதிடும் வார்த்தைகள் . . . . .

தலையசைவின் ஜாலத்தில்
தடம் மாறும் பாடலாய்
தன்னிலை மறக்கும்
தகதிமி தாளங்கள் . . . . . . . . .

எல்லாமும் அவளாக
என்னுள் விரிந்திட
என்றென்றும் தொடராதா
ஏகாந்த மாற்றங்கள் . . . . . . .


*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (14-Apr-14, 8:41 pm)
பார்வை : 205

மேலே