மனிதம்-ஒரு பார்வை

மாபெரும் பூமியில் மனிதனைத் தேடு;
வீதியிலே இறங்கி, விளக்கொளியில் ஓடு;

மனிதனா என அடையாளம் பாரு;
சரியா என, உன்னிடமே கூறு - பின்

மனிதனைப் படி, மனிதனிடம் படி,
மனிதம் இருந்தால் முழுவதும் படி;

மனம் இருந்தால் தயங்காமல் ஏற்றுக்கொள்,
இல்லையெனில் மயங்காமல் மாற்றிக்கொள்.

எழுதியவர் : சொர்ணவேலு, ச. (20-Apr-14, 10:42 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 118

மேலே