சிறப்புக்கவிதை 54 கவிதைக்காரிசுபா உயிர் கவிதை
சிறகுகள் முளையாஇளஞ்சிட்டு குருவி
என் இணை விட்டு போனதம்மா ...
இமைவிழிநனைந்திடும் ஈரத்திலே
இரவுகள் எல்லாம் நனைந்திருப்பேன்
இருளிலும் கூட விழித்திருப்பேன்
நீ வரும் வழிதேடி காத்திருப்பேன்
பால்மணம் மாறா பசுங்கிளிதான்
என்னை தனி விட்டு போனதம்மா ...
தன்னிகரில்லா அதன் அன்பு என்
இதயத்தில் ஊறுதம்மா....
உயிரில்லை என்னிடம் இப்பொழுது
இந்த உடல் ஒரு கூடு அம்மா ..
உயிர்விட்டு போனது என் உறவு இது
ஒரு விடை இல்லா கேள்வி அம்மா
நிலவினில் கூட அவன் முகம்தான்
அன்பினை பாலாய் பொழியுதம்மா
என் அகம் விட்டு அகலா அவன் உருவம்
என்னை அணுஅணுவாய் கொல்லுதம்மா
கண்ணே நான்தான் காத்திருப்பேன்
எங்கே நீ ஒளிந்து நின்றாய் ?