என்னுள்ளே என்னுள்ளே
வானுக்குள் மேகமாய்....
பூமிக்குள் நீராய்....
கடலுக்குள் அலையாய்....
காற்றுக்குள் ஈரபதமாய்....
மலருக்குள் வாசமாய்.....
மலைக்குள் அருவியாய்....
விழிக்குள் ஒளியாய்....
சங்குக்குள் ஒலியாய்.....
கதைக்குள் கருவாய்...
கருவிக்குள் இசையாய்.....
விதைக்குள் தருவாய்....
கவிதைக்குள் கற்பனையாய்....
என்னுள்ளே பத்திரமாய்...
அதற்குள்ளே சித்திரமாய்....
என் தேகத்தேர் பவனிவர
இதயத்தோடு இணைந்த.....
தொடர் சங்கிலியாய்...
""""அவளின் நினைவுகள்....""""