வேலைக்கு செல்லும் பெண்கள்

வேலைக்கு செல்லும் பெண்கள்

வீதி எங்கும் அமைதி
தூரத்தில் சத்தம்
துரத்திக் கொண்டிருக்கும் நாய்
என் உடம்பிலே நடுக்கம்
என் மனதிலே பதற்றம்
பிணந்தின்னி கழுகுகள் பின்தொடர
மனித ஓநாய்கள் ஊலை இட
என் கால்கள் வேகமாக ஓடியது
மரணத்தின் விளிம்பிற்கே
என் இதயமோ துடிக்கிறது
வெடிக்கும் அளவிற்கு
என் கண்ணிலே
கண்ணீர் இல்லை அழுவதற்கு
சுற்றி சுற்றி பார்கிறேன்
சுற்றும் பூமி தெரிகிறது
சுற்றி உள்ள எவரும் தெரியவில்லை
மின்மினி விளக்குகள் மின்னவில்லை - அது
மின்னும் போது வெளிச்சம் தெரியவில்லை
வர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டேன்
என் வழிக்கு ஒரு வழி பிறக்காத

கவிசன் .கௌதம்

எழுதியவர் : கவிஞ்சன் கௌதம் (9-May-14, 6:40 pm)
சேர்த்தது : கௌதம்
பார்வை : 601

மேலே