சிறுகதை எழுத்தாளர்கள் கவனிக்க- பொள்ளாச்சி அபி

சிறுகதை எழுத்தாளர்கள் கவனிக்க-  பொள்ளாச்சி அபி

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்..!

தளத்தில், சிறுகதைகள் எழுதும் தோழர்களுக்கு,ஒரு நல்ல வாய்ப்பு..!

தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் போடி-மாலன் அறக்கட்டளை இணைந்து,சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப் படுகிறது.!

சிறுகதைகள் எத்தனைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.

கதைகளை தெளிவான கையெழுத்தில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.அல்லது மின் அஞ்சலிலும் அனுப்பலாம்.

தேர்வு செய்யப் படும் முதல் மூன்று இடங்கள் பெற்ற கதைகளுக்கு, எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில், கவுரவமான பரிசுத் தொகையும் உண்டு.

அனுப்ப வேண்டிய முகவரி-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
புத்துயிர் புத்தக மையம்.
14.புதிய பேருந்து நிலையம்,
கம்பம்-625516
----------
கதைகள் அனுப்பவேண்டிய இறுதி நாள்.ஜூன் -20-2014-

குறிப்பு- மின் அஞ்சல் முகவரி தளத்தில் நேரடியாக பதிவு செய்ய முடியாது என்பதால்.இதனை வாசிக்கும் தோழர்கள், தனி விடுகை விடாமல், படைப்பின் கருத்துப் பகுதியிலேயே உங்கள் விருப்பத்தை தெரிவித்தால், தொடர்ந்து உங்களுக்கு தனிவிடுகையில் மின் அஞ்சல் முகவரியை அனுப்பி வைக்கிறேன்.!

மேலும்,சிறுகதைகள் எழுதும் உங்கள் நண்பர்களுக்காக,இதனை பகிர்ந்து கொண்டால் இன்னும் மகிழ்வேன்.
இதுபோல மற்ற போட்டிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட தகவல்கள் இருந்தாலும்,அவ்வபோது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே..!

பொதுவான போட்டி..
அனைவருக்கும் சம வாய்ப்பு ..!
வாருங்கள் தோழர்களே..,
உங்கள் திறமைகள் உலகுக்கு உதவட்டும்.!

அன்புடன்
பொள்ளாச்சி அபி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (26-May-14, 12:06 pm)
பார்வை : 206

மேலே