தொலைந்த சுயம்

நெல் விளைந்த
மண்ணை
மில் விளைய
தாரை வார்துவிட்டது.
கிராமம் !

விவசாயத்தை
அண்டை மாநிலங்களுக்கு
கடத்தி வருகிறது
உழவனின் வறுமை !

சேற்றில் உழவனை
கால் வைக்க விடமால்
அவனது சோற்றில்
கை வைத்து வருகிறது
வறட்சியீன் புரட்சி

கிராமங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
வெட்டி விழுங்கி
பெருத்து வருகின்றன
நகரங்கள் !

தொலைந்த சுயம் !

எழுதியவர் : சி அசோக் குமார் (10-Jun-14, 2:21 am)
Tanglish : tholaintha suyam
பார்வை : 124

மேலே