கற்கால வாழ்வே பொற்காலம் ​

​விண்ணிலிருந்து பிறக்கவில்லை நாம்
மண்ணிலிருந்தும் முளைக்கவில்லை !

உண்டான கருவும் உருவான பின்னர்
உலகையே காண்கிறோம் மனிதராய் !

உருவங்களும் மாறுது உயிரணுவிலே
பருவங்களும் மாறுது வளர்கையிலே !

எண்ணங்கள் பிறக்குது எத்திசையிலும்
வண்ணங்கள் மாறுது வாழ்க்கையிலே !

உணர்வுகள் கலக்குது உயிரினிலே
உறவுகள் அறியுது உய்க்கையிலே !

திரிந்திடும் சாதிமதங்கள் குதிக்குது
பிரித்திடும் நிலைதான் வலிக்குது !

பதவியும் பணமுமே பரிசம் போடுது
அளவிலா ஆசை அலையாய் மோதுது !

செயற்கை இயற்கையை இங்கு முந்துது
செயல்கள் நிலையின்றி இன்று தவிக்குது !

போலியும் வாழ்விலே போட்டி போடுது
உண்மையோ உலகில் தோற்றுப் போகுது !

ஒரு சாண் வயிறுதான் அனைவருக்கும்
ஒட்டியே இருக்குது பலருக்கு என்றுமே !

அலசிட எண்ணினேன் அயர்ந்திட்டேன்
அகிலமே பயணிக்கும் பாதையை கண்டு !

கற்கால மனிதனின் வாழ்வே பொற்காலம்
தற்கால வாழ்க்கையோ தடுமாறும் காலம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Jun-14, 8:25 am)
பார்வை : 60

மேலே