என் துணையானவன்

என் துணையானவன்
இமையசைவில் எனை மாற்றி
இதழசைவில் எனை வீழ்த்தி
குறுஞ்சிரிப்பில் மனம் பறித்து
முகத்தை விட அதிகமாக
இதயம் காட்டி
இனிய அன்பில் ஈர்த்தவன்
என் துனையானவன்..............
இரவினில் நிலவானவன்....
இமைகளில் நிலையானவன்....
பகலினில் வெளிச்சமாய்
இரவினில் தென்றலாய்
தனிமையில் இனிமையாய்
தேயாத பிறையாக ஒளிர்கிறான்....
என்னவன் ஸ்பரிசம் பட்டால்
கதிரவனும் குளிர் நிலவாகிவிடும்....
பட்டுப்போன மரங்களும் என்னவன்
ஊரப் பார்வையில் துளிர் விடும்....
எதார்த்தமான உன் பார்வையில் கூட
என்னுள் பறக்கின்றன
கற்பனை பட்டாம்பூச்சிகள்....
மயிலிறகு கூட தோற்றுப் போகும்
என்னவன் வருடலில்....
கடவுளும் தோற்றுப்போவான்
என் மன்னவன் கருணையில்....
இருவேறு கருவறையில் பிறந்தாலும் நாம்
வாழ்வது ஒரு இதயத்தில் தான் ....
முப்பிறவியில் செய்த பலனோ இது
இப்பிறவியில் நீ கிடைத்தது?