பலஸ்தீனை இறைவா காப்பாற்றுவாயா

என் சகோதரா
என்ன இந்த கோலம்
உந்தன் நாளங்களில் ஓடிய குருதி
வீதியில் கொட்டுவது என்ன..?

நீ என்ன தவறு செய்தாய் ...
கலிமா மொழிந்தது
உன் குற்றமா ?
அல்லாஹ்வை தொழுவது
உன் குற்றமா ?
எது குற்றம் ...
பதில் சொல்ல சொல்

எத்தனை காலம் இந்த கொடுமை
ஏவுகணைகளின் ரவைகள்
உங்கள் ஆன்மா சுவைத்து
அதிகம் ருசி கண்டு விட்டன
இரவிலும் பகலிலும்
உங்கள் ஆன்மாவை குறிபார்க்கின்றன

ஏய் இஸ்ரேலே
உனக்கு ஈவு இரக்கம் இல்லையா
யுத்த தர்மம் இன்றி
எத்தனை எத்தனை சிறுவர்கள்
எத்தனை எத்தனை பெண்கள்
உன் ரவைகளுக்கு இன்னும்
பசி தீரவில்லையா ...?

மனித உரிமை காக்கும்
அமெரிக்காவே
மாதம் ஒருமுறை கூடி
மவுசு காட்டும் ஐநாவே
எங்கே உங்கள் படைகள்
எங்கே உங்கள் சத்தங்கள்
இஸ்ரேலுக்கு ஒரு சட்டம்
இல்லாத நாட்டுக்கு ஒரு சட்டமா ...?

இறைவா இறைவா
இவர்கள் கொடுமையை பார்
எங்கே போகும் உன் சமூகம்
அகிலம் படைத்து காப்பவனே
யாவும் அறிந்த வல்லனே
நீயே பலஸ்தீனை காப்பாற்றுவாயாக

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (11-Jul-14, 9:31 pm)
பார்வை : 243

மேலே