தாயில்லா பிள்ளை

உன் கருவறையை கல்லறையாய் எர்ப்பேன் அம்மா,
நம் உறவு மெய்ப்படும் என்றால்!

உன் மடியில் மழலையாய் தவழ்ந்தேன் என,
என் கண்களில் கண்ணீராய் இன்று தவழ்கிராயோ?

வளர்பிறையாய் இருந்தேன் அம்மா...
ஏனோ உன் வானத்தை தர மறுத்து ,
எனக்கு தனிமையின் சிறை தந்தாய்!!!

நினைத்ததை எல்லாம் கிடைக்க பெற்றேன்,
ஆனால் உன் அரவணைப்பு அது ஒன்றில்லாமல்
தனியாய் கண்ணீர் துடைக்க கற்றேன்!!!

என் தோழி, அவள் அன்னை கதை சொல்ல...
உன் ஞாபகம் அது என் நெஞ்சத்தின் சதைக் கிள்ள...
என் புன்"னகை" அது போலி என்று யாரறிவாரோ ???

கடவுளின் தரம் பார்க்க ஒரு வரம் கேட்பேன்
என்ன தவம் செய்தால் என் அன்னை உயிர்தேழுவால் என்றே?
உன்னை போலவே அவனும் மறித்து போனான் போல....
என்னிடம் இருந்து உன் கரத்தை பறித்து போனான் போல!!!

-ப்ரீத்தா

(இக்கவிதை என் செல்ல அம்மாவின் மறைவுக்கு சமர்ப்பணம்)

எழுதியவர் : ப்ரீத்தா (19-Jul-14, 4:58 pm)
பார்வை : 399

மேலே