நீ வெம்பிய கண்ணீர் தானே சுனாமி

அலைந்தாடும் கடலுக்கும்

அசைந்தாடும் புயலுக்கும்

கரையோர மக்கள் மீது

அளவற்ற காதலாம்

உயிர் கொடுத்த கடல் அன்னையே

உயிர் பறித்த காரணம் என்ன?



முழுமதி நிலவோடும்

செங்கதீர் சூரியனோடும்

உன் வாழ் உயிரினத்தோடும்

ஆடிப்பாடிய நீ

உன் கண்ணீருக்கு காரணமென்ன?

நீ வெம்பிய கண்ணீர் தானே சுனாமி



உன் அலையோசை சோககீதம்

உணரவில்லை மனித உணர்வுகள்

உன் கண்ணீர் உணர்த்திய பாடம்

புரியுமா அறிவியலுக்கு .........



இயற்கையை மிஞ்சி விட்டோம்........

பறை சாற்றிய உலகிற்கு நீ கொடுத்த பாடமா இது

உன் அமைதிக்கு கேடு விளைவிக்க

நீ வெம்பிய கண்ணீர்

ஆயிரம் உயிர்களின்

கண்ணீருக்கு காரணமாகிற்று



மனித உணர்வுகளை மிதிக்கும் உலகில்

இயற்கை உணர்வுகளை

உணருமா மனித உணர்வு

கடல் அன்னையே எல்லாம் நாம் செய்த பாவமே

நீ அமைதி கொள்வாயாக ..............................

எழுதியவர் : அன்புடன் விஜய் (16-Mar-11, 6:44 pm)
சேர்த்தது : vijeyananth
பார்வை : 437

மேலே