ஈர நினைவுகள் !

கடைசி நிமிடம் !
கண்களில் கனவு கலைந்து
நிஜத்தை உணர்ந்த அந்த நிமிடம் !

எனது என்று சொந்தம் பேசி
கட்டி தழுவிய உன்னை
அந்நியனாக விட்டு விலகிய நிமிடம் !

கண்களில் வலி !
கன்னத்தில் ஈரம் !

ஈரம் !
உனது இதழ்கள்
வரைந்த கோலம் அல்ல !
என் இதயம்
வரைந்த சுவடுகள் !

காலப்போக்கில் கரைந்துவிட்டது ஈரம்
காலம் கடந்தும் கரையாத கோலமாய்
உன் நினைவுகள் மட்டும்
இன்றும் என்னிடம் !

எழுதியவர் : Kalarasigai (9-Jun-10, 9:49 pm)
சேர்த்தது : Kalarasigai
பார்வை : 708

மேலே