தமிழ் இனி மெல்ல சாகும்

தமிழ் இனி மெல்ல சாகும்

மின்சாரம் தடைபட்ட
ஒரு ஒற்றை இரவில்
விளக்கின் வழிக்கொண்டு
தொடர்ந்தேன்

அடித்திட்ட பெருங்காற்றில்
விளக்கும் விலாசமற்று போனது

மின்னல்கள் வெளிச்சமிட
இடிகள் சப்தமிட
என்னையறியாது எங்கோ
பயணிக்க தொடங்கினேன்

எழுத்தாணியே
எனக்கு வழிகாட்டுவதாய்

வள்ளுவனை
வழியில் கண்டேன்
பாரதியோ
பாட்டிசைத்து கொண்டு
கம்பன்
வீட்டு கட்டுத்தறியும்
கவி பாடிக்கொண்டு இருந்தது

எல்லோரையும்
கண்ட மகிழ்ச்சியில்
நலம் விசாரித்தேன் ?

நாங்கள் நலமே
எங்களை உலகறிய செய்த
தமிழ் நலமா
என்றே கேட்டனர் ?

என்ன சொல்ல
என்றே தெரியாமல் நான் ?

பிற மொழி சாத்திரம்
எத்தனை மொழிபெயர்த்திர்
என்றான் பாரதி
என்னை நோக்கி ?

எப்படி சொல்வேன்
பிற மொழியை தான்
தமிழாய் பேசுகிறோம் என்று !
நன்றி உரைப்பதும்
நுனி நாக்கில் தவழ்வதும்
பிற மொழியென்று

அழுதிடும் குழந்தை
அம்மா மறந்து
மம்மி என்றே அழைப்பதை
எப்படி சொல்லவென்?

கற்பவை தமிழ்வழி என்றால்
சிறுமையாய் பார்க்கும்
தமிழன் பெருகிவிட்டான்
எப்படி நாவில்வேன்
இந்த தமிழரிடம் ?

தமிழ் மாறியதை
தமிழர் வாழ்வும் மாறியதை
பாராட்டியா சொல்ல முடியும்
இணைத்து வாழ்வதற்கு
இவர்கள் இன்று ஒத்திகை பார்ப்பதை
பழைய காதல் எல்லாம்
கம்பன் காலத்து காதலென்று
பகடி உரைப்பதை
எப்படி நான் பகட்டாய் உரைக்க ?

கற்ற தமிழ்
வாழ்வளிகாதென்று
கடன் வாங்கி
பிறமொழி படிப்பதை
பெருமைப்படும் தமிழன்
பெருகிவிட்டான்
இதை பெருமையாய் சொல்ல முடியுமா
இவர்களிடம் ?

ஆயினும்
சொல்லி விட்டேன்
தமிழரால்
தமிழ் படும் பாட்டை

மீசை
முறுக்கி கொண்டே பாரதி
சொல்லி மறைந்தான்
தமிழ்
இனி மெல்ல சாகுமென்று....

பாண்டிய இளவல் மது

எழுதியவர் : பாண்டிய இளவல் மது (21-Jul-14, 11:30 pm)
பார்வை : 1347

மேலே