முகநூல்
இணையம்
உன்னை இதயமாக
நினைக்க வைத்தது
உருவமில்லா இந்த நூல்
உருவமில்லா உன் நூலில்
இதயங்கள் பறக்கின்றன
நேசக்காற்றை நெஞ்சுக்குள் சுமந்து
சுகமாய் சுவாசித்தப்படி....!!!!
உன் துடிப்பு
ஒருநொடி நின்றுவிட்டால்
உலகமே
துடிக்கதொடங்கிவிடுகிறது
பரிதவிப்பில்
தொப்புள்கொடி நேசம்
தொடர்பறுந்துவிட்டதைப்போல
இறைவன்தான்
படைப்பாளி என
இதுவரை
பெருமைக்கொண்டான்.
உன்னை படைத்து
என்னை அன்பில் இணைத்த
மனிதனும் புது பிரம்மனே !!
கவிதாயினி நிலாபாரதி