குழந்தை பாலியல் வல்லுறவு

உன் காமப்பசிக்கு பலி இந்த பிஞ்சு மலர்களா?
அந்த பிஞ்சு கதரலுக்கும் கரையாத கல் உல்லமா?

அந்த பிஞ்சு உடலில் கவரும் வண்ணம் என்ன கண்டாய்?
அவள் சிரிப்பை கண்டு அவளை சின்னா பின்னமாக்கும் எண்ணம் எப்படி வந்தது?

பாமரனாய் வாழ்த்தபோது செவியுற்றதில்லை இந்த செய்தி,
படித்தபின் பறந்துபோனது மனித நீதி!

இந்த தவறில் தலைநகர் டெல்லி தான் முதலிடமாம்!
அப்போ தலைநகர் மிருகங்களின் கூடாரமா?

உனக்கு பசியென்றால் உன் பசிக்கு விருந்தாக திரியும் பரத்தையரிடம் போ!
அவளுக்கு கொடுக்க பணம் இல்லையேல் அவளிடம் செருப்படி வாங்கி சாகு!
பச்சிளம் குழந்தைகளை ஏனடா சீண்டுகிறாய்?

வாழ தகுதி இல்லா ஜடமே! நீ மண்ணில் வாழ்வதே பாவமடா!

நீதி என்வசம் இருந்தால்!

உன் நெற்றியில் "நான் ஒரு காம கொடூரன்" என பச்சை குத்தி உலாவவிடுவேன்,
உன்னிடம் உன் சகோதரி கூட நெருங்க அருவருப்புபடுவாள்!

நீ நாயாக தெருவில் திரிந்து சாக வேண்டும்! உன்னை பார்க்கும் உன்னை போன்றவனும் அடங்க வேண்டும்!! பயத்தில் நடுங்க வேண்டும்!!!

எழுதியவர் : அப்துல் பாஸித்.ச (5-Aug-14, 1:33 am)
பார்வை : 332

மேலே