கவிதை எழுதுகிறேன்

இன்று என்னைப் பார்த்து
எனக்கே வியப்பு
எனக்கு மட்டுமல்ல - என்
நன்பிகளுக்குக் கூட
நான் கவிதை எழுதுகிறேன்
சிறுகதை எழுதி களைத்துப்
போன என் பெனாவிற்கோ
மட்டற்ற மகிழ்ச்சி
நண்பிகள் கவிதை எழுத
நான் தூங்கிய காலம் - என்
பாடசாலை காலம்
கவிதை எழுத மேலதிக
வகுப்புச் சென்றேன் - உன்
மூளையில் என்ன களிமண்ணா ?
ஆசிரியர் ஏசியது ஒரு காலம்
இன்று காலம் வேறு
நான் கவிதை எழுதுகிறேன்
சிறுகதை எழுதப் போன - என்
கைகள் கவிதை எழுதுகிறது
நான் பேசும் வார்த்தைகள்
கவியாய் வெளி வருகிறது
காரணம் எனக்கே தெரியவில்லை
நண்பி சொன்னாள்
காதல் வந்தால் கவிதை வருமாம்
ஓர் அறிஞர் சொன்னார்
சமூக வன்முறை கண்டால்
கவிதை வருமாம்
தாய் சொன்னாள்
இயற்கையை ரசித்தால்
கவிதை வருமாம்
காரணம் எனக்கு தேவையில்லை
நான் கவிதை எழுதுகிறேன்
அது எனக்குப் போதும்

எழுதியவர் : fasrina (9-Aug-14, 8:05 pm)
பார்வை : 154

மேலே