அவளும் அர்த்தங்களும்

அவளும் அர்த்தங்களும்
========================
ஒரே மண்ணில்
நீயும் நானும் சிருஷ்டிக்கப்பட்டிருந்தோம்
பிராயம் பற்றிய நாள் முதல்
நம்முடைய ரத்தம்
ஒரு பிஞ்சு அருவியைப்போல
ஒருமித்து ஓடியது
நம்முடைய பட்டங்கள்
காற்று வெளியிடையில், ஒரே உயரத்தில் பறந்தன
நம் காகிதக்களி வள்ளங்கள்
சாலையில் தேங்கிய மழைநீரில்
சேர்ந்தே பயணித்தன,
நாம் வேகமாக
வளர்ந்துவிட்டோமாம்,
நம் இரு வீட்டாரின் கடுலாசுக் கத்துகள் சொல்லின,
குட்டிக்காலம்
அதிக தூரத்தில் போயிருந்தது,
இளமைக்கால ஏகாந்தத்தில்,
மனதில் சட்டென்று வெளிச்சம் அகன்ற ஒருநாள்,
நான் உன் கைக்கொண்ட
ஒரு கண்ணாடி வளைவியை உடைத்திருந்தேன்,
அதன் சில் பட்டு
அறுபட்டது உன் கைநரம்பு,
ஸ்ஸ் என்று உஷ்ணமுரைத்தாய், உதடு பிசைந்தாய்,
பின் நாம்
தண்ணீர்த் தேங்கிய மடுவொன்றில்
பொற்றாமரை நாளங்களுடைய கொடிச் சிக்கல்களின்மேலே
தஞ்சம் கொண்டிருந்தோம்
அறிவாயா ,,,,,,,
அப்போது
உனக்குப்பிடித்த
மழலைப்படங்கள் நிறைந்த
செருகேட்டிற்குள்ளே
நீ ஒளித்து வைத்த
இரவல் மயில்பீலி ஒன்று
மூன்று சிற்றிறகுகள் பிரசவித்திருந்ததை ம்ம்
அனுசரன்