என்னை மாற்றிய இயற்கை

நுனிக் கிளைகளில் மலர்கள் - புல்லாங்குழலில்
நுழைந்து வெளியேறும் ஸ்வரங்கள் - என்று நான்

தென்றலுக்கும் உருவம் கொடுத்தேன் ரசனையால் - நான்
தெள்ளு தமிழ் தினம் படித்தேன் கவிதையாய்

எனது கர்வம் - கவிஞன் என்று உருவெடுக்கும் - பின் அது
இயற்கை தனை கண்டவுடன் பணிந்து வணங்கும் ....!!

இயற்கைக்கும் மீறிய கவிதை வேறில்லை - இதை
இனிமையாய் நான் உணர்ந்தேன் - கர்வமில்லை....!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (25-Aug-14, 8:23 am)
பார்வை : 126

மேலே