வாலிக்கு அஞ்சலி

வாலி நீ ஒரு பெரிய தமிழ் வாளி
அறிவாளி படைப்பாளி கவிப்பாளி

கலைமகள் உந் நாவின் தலைமகள்
உவமானம் உவமேயம் உன் தோட்டகாரர்கள்

கருத்தும் சொல்லும் தோழர்கள்
பின்னிப்பிணையும் வார்தை ஜாலங்கள்

வானவில்லின் வண்ண நிறங்கள்
வானவில் மட்டும் தான் தரும்

நீ மட்டும் தான் தருவாய்
சுவையுடன் பல்லவி அநுபல்லவி சரணம்

ஆழ்ந்த சொற்கள் கவிதை தரும்
ஆனால் உன் நம்பிக்கை

கவிதை தந்தது பாட்டு தந்தது
பொருள் தந்தது மெய்ஞானமும் தந்தது

வாழ்கையின் பாடத்தை நன்கு அறிந்தவன்
அதன் வெளிப்பாடு உன் சாப்பாடு

காதலும் தெரியும் ஊடலும் தெரியும்
நட்பும் தெரியும் மோதலும் தெரியும்

பாட்டும் தெரியும் நோட்டும் தெரியும்
பேரும் தெரியும் புகழம் தெரியும்

புகழின் வழியே இகழும் தெரியும்
தெரியும் தெரியும் எல்லாம் தெரியும்

சிவாஜி எம்ஜிர் இரு துருவம் தெரியும்
துருவக் கோள்களின் காந்தமும் புரியும்

அதை புரிந்து கொண்டு வாழவும் தெரியும்
மாட்டவும் தெரியும் மீளவும் தெரியும்

எதையும் தாங்கும் இதயம் கேட்டு
உன் வனத்துக்குள்ளே திரும்பிப்புகவும் முடியும்

வாலி நின் புகழ் வாழி!

எழுதியவர் : ரமணி (31-Aug-14, 5:51 pm)
பார்வை : 108

சிறந்த கவிதைகள்

மேலே