என்னவனதிகாரம்
கள்ளப் பார்வையால்
கல் எரிந்து விட்டான்
சிதறிப் போனேன்
சில நொடிகளிலே !!
பார்த்து பார்த்து
என்னை அவன்
வசம் செய்து விட்டான் !!
வியந்து தான் போனேன்
புரியாத மொழியை -அவன்
புருவத்தின் கீழ் கண்டதால் !!
மொத்தத்தில்
முழுமையாய்
மாயம் செய்தான் !!
தெரியாத பாடத்தை
அறியாத மொழியில்
அரை நொடியில் கற்பித்தான் !!