கலி காலம் -நகைச்சுவை
கலி காலம்
----------------
இந்த நூற்றாண்டின் இறுதியில் இப்படியும் நாட்டில் நிலவரம் இருக்கலாம்
தெருவில் சில்லறை வியாபாரிகள் சிலர் தங்கள் தங்கள் பண்டங்களை
கூவி கூவி விகின்றனர்,அது என்ன கேட்போமா? வாருங்கள் .
வியாபாரி 1 : தங்கம் வாங்கலையோ தங்கம் வாங்கலையோ
ஒரு கிராம் காசு பாத்து ருபாய் மட்டுமே; ஒன்று வாங்கினால்
ஒன்று இனாம் ; ஐயா வாங்க, அம்மா வாங்க தங்கமோ தங்கம்------------
வியாபாரி 2 : வெள்ளி வாங்குங்க ஐயா மாறே ; வெள்ளி வாங்குங்க அம்மா மாறே
10 கிராம் வில்லை ஒரு ருபாய் மட்டுமே ; நாளை விலை ஏறலாம்
வாங்க வாங்க வெள்ளி வாங்கலாம் .
சோமு ; ராமு அண்ணே பார்த்திகளா தங்கமும் வெள்ளியும் காய்கறி மாதிரி
மலிவாகி போச்சுது ஆனால் சவரன் விலையை தொடுதே அரிசியும்
பருப்பும்
ராமு: அண்ணே சோமண்ணே; குடி நீருக்கு ரேஷன் கார்டு வந்திருக்கு
ஒரு குடும்பத்துக்கு வாரம் 10 லிட்டர் தராங்களாம் .........
சோமு : இது தான் கலி முத்திய காலமாய் தோணுது
ராமு ; இப்போதைக்கு கிடைக்கும் காய் கறி விவரம் தெரியுமா சோமு அண்ணே
வெண்டக்காய் நூறு கிராம் இருபது ரூபாய்; கத்திரி நூறு கிராம் பாத்து ருபாய்
வெங்காயம் ஒன்று பாத்து ரூபாய் ; வாழைக்காய் ஒன்று ஐம்பது ருபாய் .....
கீரை மலிவா விக்குது, ஒரு கட்டு அறுபது ரூபாய் மட்டுமே!
சோமு : அண்ணே இது கனவல்ல ; இதுதான் இன்றைய நிலவரம்
ராமு : போக போக உணவிற்காக போர் மூளமோ? தெரியலையே
சோமு: இதுதான் கலி காலம்