நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்

வெளியூருக்கு
வேலைக்காக
போன மவன்
எல்லோரோடயும்
தொடர்புல இருந்தான்

ஃபேஸ் புக்ல
வாட்ஸப்புல
ஸ்கைப்புல
இமெயில்ல.

பாவம் .!
அப்பா அம்மாவோட
பேச முடியல.

'அந்த கிழங்களுக்கு
இதுல எதுலயும்
அக்கௌண்ட் இல்ல
நான் என்ன பண்ணமுடியும்?'

- என்று சொல்பவர்
நீங்களாக இருந்தால்
அந்த கிழங்களுக்கு
ஒரு ஃபோன்
செய்துவிட்டு வந்து ...

பிறகு
எவனோ(ளோ)டயாவது
பேசித் தொலையுங்கள்

யாரும் எங்கும்
ஓடிவிட மாட்டோம்.
ஆனால் அந்தகிழங்கள்
இன்னும்
கொஞ்சகாலம்தான்
இருக்க கூடும்.

எழுதியவர் : ராம்வசந்த் (3-Sep-14, 7:59 am)
பார்வை : 107

மேலே