நில மகள்
பாதை ஓரம் பாரங்கல்லு
கல்லுமேலே பேபி ஈ நான்
வந்த வழியே நீயும் இருக்க
வந்தஅமர்ந்தேன் ஈ கூறியது
கல்லைப் பார்த்து...!!
கல்லோ முழித்தபடியே
நோக்கியது மண்ணை
உன்னால் உருவெடுத்த
நான் உன்னை விட
உருவத்தில் பெரியவன்
என்று தலைக்கனம்
கொண்டேன்...!!!
ஆனால் இன்று என்
நிலைமையோ வேறு ஈ
முதல் வழிப் போக்கன்
வரை வந்தமர்ந்து
ஏற்றுகின்றான் என்
மேல் சுமையை
கலங்கியது கல்லு..!!!
மண் அமைதியாக
நினைக்கின்றது
என்னால் உருவாகி
என்மேலே நீ அமர்ந்து
இருக்கையிலே என்னைக்
கேலியாகப் பார்த்தாயே நீ
ஒன்றை மறந்து விட்டாயே
உன்னையும் உன் போல்
அமரும் சுமையையும் நான்
தான் சுமக்கின்றேன் என்பதை...!!
தலைக்கனம் பிடித்த
உன் போல் சிலரால்தான்
நானும் தள்ளாடிப் போகின்றேன்
சில நேரம்...!!
நான் கொஞ்சம் அசையும்
போது எத்தனை அசம்பாவிதம்
நடக்கும் என்று அறிந்தும் என்
நெஞ்சின்மேல் அமர்ந்து கொண்டே
என் நெஞ்சையே குடையும்
உலகமடா இது மண் நினைத்துக்
கொண்டே சுமக்கின்றது சுமையை...!!