என்றென்றும் தொடரும்
என்றென்றும் தொடரும் ...
நான் சொல்லாதவை
கூட உன்னால் மட்டுமே
புரிந்துகொள்ள முடிகிறது
யோசித்தபடியே நான் ...
நவீனத்தின் உதவியுடன்
அனுப்பும் செய்தியை விட
என் கண்களின் செய்தியை
வேகமாய் புரிந்து கொள்கிறாய்...
எத்தனையோ சாமங்கள்
எத்தனையோ விடியல்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ
அத்தனையும் கடந்தது நம்காதல் ...
எந்த விடியலில் என் கரம் பிடித்து
எந்த சாமத்தில் என்னை
சேர்வாயோ என்றெண்ணியே
நானும் இருக்கிறேன் ...
தொலைவினில் நீ
தொடர்பில்லாமல் நாம்
தொடர்கின்றன நினைவுகள்
தொடர்கிறது நம் காதல்...
- வைஷ்ணவ தேவி