கவிதை ஒரு பட்டுப்புழு

மனதில் தோன்றும்
கவிதைகள்
பட்டுபுழுவைப் போல...

மெதுவாய் பிறந்து,
உயிர் காத்து...
மிகுந்த அவதிப்பட்டு...
தானாகவே வெளிவரும்.

யாரும்,
அவசரப்பட்டு...
அதன் கூட்டை
உடைத்து விடாதீர்கள்.
அதில் உயிர் இருக்காது.

எழுதியவர் : G.S.வாசன் (24-Mar-11, 11:18 pm)
சேர்த்தது : G.S.Vasan
பார்வை : 477

மேலே