உதிராத காதலை நான் தருவேன் - இராஜ்குமார்

உதிராத காதலை நான் தருவேன்
=================================

கற்பனை எல்லையை மீறிவிடும்
வெள்ளைத்தாளில் விரலே மூழ்கிவிடும்
எழுத்து கவியை மெருகேற்றும்
மனதை மெதுவாய் திசைமாற்றும்

பயணம் முழுக்க துணைவரும்
சுயமாய் சிந்தனை அலைவரும்
ஓடையோர ரசனை சுகம்தரும்
குழந்தை எண்ணம் முளைவிடும்

துருவ விளிம்பிலும் நின்றுவிடும்
அதிரும் மொழியில் பேசிவிடும்
கதிரின் காம்பிலும் துளிர்விடும்
எழுத்தின் முனையில் உயிர்விடும்

உந்தன் கண்ணழகு கடத்திவிட
சிணுங்காத சிலையழகு சிரித்துவிட
அலையாத என்விழியை பறித்துவிட
உதிராத காதலை நான் தருவேன் ..!!

- இராஜ்குமார்

நாள் : 8 - 7 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (20-Sep-14, 9:41 am)
பார்வை : 90

மேலே