ஓர் ஊர்க்குருவியின் புலம்பல்

என் காதலனுக்காய் பல
மாதங்கள் காத்திருக்கிறேன்
அவன் எனக்கு மட்டும்
காதலனல்ல என் போல் பல
பறவைகளின் காதலன்
இருந்தும் என் மனதில் அவன்
எனக்கு மட்டுமே காதலன்

அன்றொரு நாள் விரைவில்
வருவேன் என காதோரம்
சொல்லிச் சென்றான்
அன்றிலிருந்து இன்று வரை
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கிறேன் அவன்
வரும் வரை .....

அவன் என் வீடு வர பல
தடைகளை தாண்டித் தான்
வர வேண்டும் .என் காதலனின்
பிரச்சினைகளுக்குக் காரணம்
இந்த பாழாய்ப் போன மனிதர்கள்
என அவன் அன்றொரு நாள்
சொன்ன யாபகம்

அவன் சொன்னதும் உண்மையே
மனிதன் மரத்தை வெட்டிப் போட
ஆறுகள் அனைத்தும் வற்றிப் போக
என் மழைக் காதலன் எப்படி
வருவான்

வறட்சி எனும் தீயவனை வீட்டு
வாசல் கூட்டி வந்த மனிதனே
நீ மழை எனும் நல்லவனை
எதிர்ப் பார்க்கலாமோ?

மனிதனே ! நீ என் மழை தேவன்
வரும் போதும் திட்டினாய்
வராத போதும் திட்டுகிறாய்
என் காதலனுக்கும் ரோஷம்
இருக்கிறது தெரிந்து கொள்

எழுதியவர் : fasrina (24-Sep-14, 9:43 am)
பார்வை : 74

மேலே