காலாடை

குச்சிக் கால்களா
கொழுத்த பெருங்கால்களா
எக்கால்கள் என்றாலும்
கால்களொடு ஒட்டிய
ஆடையை அணிந்து
கால் அமைப்பைத் துள்ளியமாய்
காண்பவர் ரசிக்க
பவனி வருவது
அணிந்தவர்க்கும் பெற்றோர்க்கும்
மணந்தோர்க்கும் உடன்பிறந்தோர்க்கும்
உற்றார் உறவினர்க்கும்
நண்பர் குழாமுக்கும்
அளித்திடும் பேரானந்தம்

நாகரிக மோகம் தரும்
நித்தியானந்தம்
புதிய நூற்றாண்டின்
பரமானந்தம்.

கலாச்சாரம் புதியது
கால்களுக்குக் காணிக்கை.

எழுதியவர் : மலர் (30-Sep-14, 11:01 am)
பார்வை : 195

மேலே