என் காதல்
என் உயிரே அடி நீ தானே என்னுடன் வா என் முழுநிலவே...!
உனக்காக நான் வாழ்ந்திடுவேனே
என் உயிர் உடலில் உள்ளவரை...!
இனி, நீ போதும் அடி நீ போதும் என் வாழ்கையில்
இனி நீ போதும்
உன்னுடன் நான் வாழ்ந்தாலே அந்த சொர்க்கமும் என் வசமாகும் ...!
உன்னை விட்டு பிரிகின்ற ஒரு நொடி வந்தால்
அழித்திடுவேன் இந்த உலகத்தையே...!
இன்னும் ஒரு ஜென்மம் நாம் பிறந்தாலும்
உன்னை விட்டு எங்கும் விலக மாட்டேன்...!
நம் வாழ்க்கையில் தான் இந்த பூமி சுற்றும்
நம் காலம்வரை உயிரே...!
உன் அன்பில் நான் திளைத்தேன்
உன்னோடு தான் இறப்பேன் என் வாழ்வின் கருவே நீ தான் என் அன்பே
உன்னை நான் மறக்க முடியாது கண்ணே
என் உயிருள்ளவரை உன்னை சுவாசம் செய்வேன்
என் உயிருமினி உனதே...!