நான் மட்டும் துன்பப்படுவதா ,,,

ஏய் காமனே ....!!!
நீ இருவரிடமும் இரு ...
என்னில் மட்டும் இருக்காதே ...
நான் மட்டும் துன்பப்படுவதா ,,,?

நீ என்னில் தரும் வலி ...
என் மேனியில் படரும் ....
காதல் தேமல் அங்கும் ...
படர செய் - இல்லையேல் ...
என் வலியை என்னவன்
உணரமாட்டான் ....!!!

திருக்குறள் : 1197
+
தனிப்படர்மிகுதி
+
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 117

எழுதியவர் : கே இனியவன் (13-Nov-14, 10:01 am)
பார்வை : 109

மேலே