மனிதமே வரம் கொடு
தொலை நோக்குப் பார்வை வேண்டும் - எதற்கும்
விலை போகா நேர்மை வேண்டும் - தன்
நிலை குலையா நடத்தை வேண்டும் - நொடிப்பொழுதும்
அலை பாயா மனமும் வேண்டும்.....!!
சாந்தமே நிறைய வேண்டும் - உயிர்களின்
சத்தத்தில் கீதம் வேண்டும்
சமத்துவம் நிறையவேண்டும் - உலகத்தில்
சர்வமும் நலமே வேண்டும்.......!!