கிறுக்கனின் பிதற்றல்கள்

சாமி...பிச்சை போடுங்கையா
கேட்டவன் தட்டில்
ஒரு ருபாய் போட்டு விட்டு
உள்ளே போய்........
சாமி... காப்பாற்றையா
கேட்காதவன் உண்டியலில்
பத்து ருபாய் போட்டேன்

************************************

நாட்காட்டியில்
தேதிகள் கிழிப்பது போல்....
டாஸ்மாக் கடை சரக்குகள்
நம் வாழ்க்கையை கிழிக்கின்றன

**************************************
ஆடு......எல்லோருக்கும் தெரிய
பாடு.......எல்லோருக்கும் கேட்க
காதலி....யாருக்கும் தெரியாமல்

****************************************
நம் வாழ்க்கை
நமக்கே வெறுப்பாக தெரியும்
மற்றவர்களுக்கு.........
பொறாமையாக தெரியும்

*******************************************

சிறையில்
குற்றவாளிகள் சாப்பிடும்
சத்தான உணவு.....
வெளியே
நிறைய நிரபராதிகளுக்கு
கிடைப்பதில்லை

*********************************************

எல்லோரும்
சுமை மூட்டைகளுடன்தான் வருகிறார்கள்
நீ உன் சுமையை
அவர்கள் மீது இறக்கி வைக்காதே

******************************************************************

நண்பர்களிடம்
நான் அன்பைத்தான் விதைக்கிறேன்
அவைகள் துரோகமாக முளைக்கின்றன


சரி....
இவ்வளவு நேரம் படித்தீர்களே
அத்தனையையும் மறந்துவிடுங்கள்

ஏன்? என்றால்.....
இவைகள்
ஒரு கிறுக்கனின் பிதற்றல்கள்

உங்கள் மண்டை
குப்பைத்தொட்டி அல்ல
அடுத்தவர் பிதற்றல்களை
நிரப்பி வைக்க..........

........................................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (3-Dec-14, 2:14 pm)
பார்வை : 133

மேலே