நிறப்புரிகை ----------அஹமது அலி-----

******விழி வழி கடந்து மீண்டும்
******விழியில் விழுந்து மூளையின்
மொழி பெயர்ப்பில் புரியும்
காட்சியின் நிற சாட்சிகள்.


**********நதியோர பூமியின் விரிப்பு
*********பார்த்ததும் புரியாத சிலிர்ப்பு
பார்க்க வந்திடும் இச்சை
பார்வை சொன்ன நிறம் பச்சை


*********சமுத்திர அலைகளின் கூட்டம்
*********சங்கமிக்கும் கரைத் தோட்டம்
கரையுடன் முத்தப் பன்மை
நுரைத்த எச்சில் வெண்மை


*******அன்னாந்து திரும்பிய சிரம்
*******அலைபாய்ந்தது ஆகாயத்தின் புறம்
வானம் முடிவிலி நீளம்
வண்ணம் முழுவதும் நீலம்


******வளர்ந்து தேய்ந்த நிலவு
******வானுடன் களமாடிய உறவு
கருவறை கல்லறை இருன்மை
காண அருமை கருமை


*******தேகம் பிறந்த ஆறு
*******தாகம் தணிக்கும் மோரு
உள்ளுக்குள் ஓடும்வரை உயிர்ப்பு
உயிரோட்டம் தருமந்த சிவப்பு


*******ஆவாரங் காட்டின் முகவரி
*******ஆகாச அந்தியின் முக வரி
மங்கலம் ஏந்திடும் அஞ்சல்
மனதுக்கு நிறைவான மஞ்சள்


********பார்க்கும் பார்வை ஒன்றாகும்
********படுகின்ற காட்சிகள் பலவாகும்
காட்சியின் நிறங்கள் வேறாகும்
கண்களின் நிறப்புரிகை கொடையாகும்

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (9-Dec-14, 7:30 am)
பார்வை : 346

மேலே