கம்பன் வர்ணித்தான்

''பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும் ?
நறை கமழ் அலங்கலான் நயன கோசரம் '' என்ற கம்பனின் ஜீவ வரிகளில் ..

பெண்களால் மட்டுமே உணரக்கூடிய நிகழ்வுகளை எழுதுவதில் பெருமை பெற்ற கவிஞன் கம்பனையே சாரும் ...

''யானைப் பாகன் மறைந்த கணமே,, .மதம் பிடித்த யானை , தன்னை அடக்குகின்ற அங்குசத்தை தள்ளிவிட்டு தான் விரும்பிய வழியே செல்வது போலத் தான் தன் விருப்பத் தலைவன் ராமன் நடந்து கடந்து சென்ற நிலையில் , சீதை மனம் தன்னை அடக்கிவைக்கும் 'நிறை ' என்னும் குணத்தை நீக்கித்தான் விரும்பிய வழிச் சென்றது .என்று சீதையின் காதல் நிலையைக் கம்பன் வர்ணித்தான்.... அவனையே சாரும் '' கம்பனுக்கு நிகர் கம்பனே ''

எழுதியவர் : படித்தது (18-Dec-14, 1:02 pm)
பார்வை : 124

மேலே