கரை பட்ட காதல் வாழ்க

காதல் உதயத்தில்
கவிதை உலகத்தில்
காதல் உள்ளத்தில்
காதல் இல்லத்தில்.

நான் உன் மயக்கத்தில்
நீ என் இதயத்தில்
நான் உன் உள்ளத்தில்
கற்பனை நிலையத்தில்..

இப்படி எல்லா நிலையத்திலும்
என்னை பயணம் செய்ய
வைத்து விட்டு என்னை இப்போ
காவல் நிலையத்தில்

கை கட்ட வைத்து
விட்டாயே.. நாம்
காதலை கலங்க படுத்தி
கரை படுத்தி கண்ணீராய்.


சிந்துகின்ற என் கண்ணீர்
இதயம் இயங்கும் வரை
உணங்காமல் உன்னை
நினைத்து ஈரமாய் இருக்கும்.

என் காதல் என்றும்
உன்னுடன் வாழ்ந்து
கொண்டிருக்கும். காசு
கொடுத்து காதலை.

கரை படுத்திய உன்னை
காலமெல்லாம் வாழ்க நீ என்றும்
கரை பட்ட என் இதயமும்
வாழும் உன் நினைவில் என்றும்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (21-Dec-14, 3:21 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 98

மேலே