பூவைக்குள் பாவை

மலர்கள் வெளிவரத் துடிக்கின்றதே
மொட்டாக உனைக் கண்டு உனைக்
கண்டதும் இதழ் விரித்து சிரிக்கின்றதே
பல வண்ணங்களாக உன் முக அழகை
உன் சிரிப்பழகைக் கண்டதும்.....!

எல்லா மலர்களும் காத்திருப்பதே
உன் வாசம் வேண்டி வருகை
நீ சென்றதும் வரும்வரை
ஒய்வு பெறுவதே உன் அசைவுகளைக்
கண்டு ரசிக்கவே ஆடாமல் அசையாமல் ....!

உன் இமைகள் மீது அமரும் பட்டாம் பூச்சிகள்
எங்கள் இதழ்கள் மீது அமரும் வரை
காத்திருந்து ரசிப்பதற்கே ஆனந்தம்
மழைத்துளிகள் என் மேல் வாடியதும்
வாடாமல் ரசிக்கிறதே உன்னிடம் மட்டும்
பூவையும் பாவையும் எது எனத் தெரியாமல்.....!

வரம் கேட்கிறது செடிகளெல்லாம்
உன் மேல் மட்டும் பூக்க வேண்டுமென்று
நடப்பதற்கும் ஓடுவதற்கும்
அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்கும்
பூக்களெல்லாம் பூவையராக வேண்டி....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (29-Dec-14, 9:34 am)
பார்வை : 71

மேலே