அம்மாஞ்சியும் நண்பரும்

அம்மாஞ்சி எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி
குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க அம்மாஞ்சி முடிவு
செய்தான்.ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.
அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் 'ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க...? ' என்றார்
"ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல..."
"ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா...?"
"அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே..."
"பணத்தை யாரும் எடுத்துட்டாங்கன்னா..?"
"பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்...அதிலேர்ந்து எடுத்துப்பேன்.."
"அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா...?
"நான் என்ன முட்டாளா....?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்..."என்று
பெருமையாக சொன்னான் அம்மாஞ்சி.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (11-Jan-15, 12:02 am)
பார்வை : 69

மேலே