வானம் பூமி

'வானம் பூமி' சொல்வதற்கு
உதடுகள் ஒட்டும் - ஆனால்
அவை என்றும் எங்கும்
தொட்டுக்கொள்வதில்லை!

வளமையும் வறுமையும்
மேடையில் மட்டும் சேரும்
முழக்கங்கள் தேய்ந்தபின்
வளமை மட்டும் காரில் பறக்கும்!

நாட்டின் இழிநிலை மாறவேண்டும்!
நிம்மதிநாட்கள் அனைவர்க்கும் வேண்டும்!

பொய்கூத்துக்கள் குறையவேண்டும்!
பொதுமக்களுக்கு தெளிவுவேண்டும்!

வாய்ப்புக்கள் பகிரவேண்டும்!
வளமான நாடுதான் வேண்டும்!!

-சூர்யபுத்திரன் (1994)
(கரு: ராஜேந்திரன்)

எழுதியவர் : Dr CR சூரியகுமார் (23-Jan-15, 11:39 am)
பார்வை : 597

மேலே