நெஞ்சில் வாழும் நட்பின் நினைவுகள் 555

தோழியே...

பள்ளி செல்லும் வயதில்
பழகிய உறவு...

நட்பெனும் புதிய உறவால்
இணைந்தோம்...

நமக்குள்ளே பல
செல்ல சண்டைகள்...

சில ஊடல்களில் பேசாத
நாட்களும் உண்டு அருகில் அமர்ந்து...

தொலைவில் அமர்ந்து
பேசிகொண்ட நாட்களும் உண்டு...

கல்லூரி நாட்களில் இருவேறு
கல்லூரிகளில் நாம் பயின்றாலும்...

நாம் சந்திக்கும் நாட்களில்
நமக்குள்ளே ஏற்படும் உற்சாகம்...

அதனை சொல்ல
வார்த்தைகள் இல்லை...

இன்று திருமண வாழ்வில்
பல மைகள் கடந்து நாம் இருந்தாலும்...

கைபேசியில் உரையாடும் போது
எழும் சந்தோஷ வார்த்தைகளை...

சொல்லமுடியாமல் சில வினாடிகள்
மௌனம் கொள்கிறோம் நீயும் நானும்...

கட்டுமரங்கள் சுமப்பதைபோல
நட்பெனும் நம் உறவுகளை சுமப்பேன்...

கரைசேரும் வரை அல்ல...

என் கல்லறைவரை
சுகமாக...

நாம் மறைந்தாலும் வாழும்
எங்கேனும் ஒரு மூலையில்...

நம் நட்பின் நினைவுகள்.....

[என் உயிர் தோழிகளுக்காக ].....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Feb-15, 4:19 pm)
பார்வை : 267

மேலே