நெஞ்சு பொறுக்குதில்லையே -மண் பயனுற வேண்டும்

முதியோர் இல்லம் - என்றுமே
மூடப்படாத கதவுகள் இங்கு எவரையும்
சிறைபிடிக்கவில்லை சிறைபடுத்தப்படுகிறார்கள்
மனிதர் பலருக்கு இவ்வில்லத்தை கோவிலாகவும்
பெற்றோறை தெய்வமாகவும் பாவிக்கிறார்கள்
மாதம் ஒரு முறை வந்து வணங்கி காணிக்கை
செலுத்துவதால் -ஆனால் அக்கடவுளை
வீட்டுக்கு அழைத்துச்செல்ல ???...
பண்டிகை நாட்களுக்கு கூட அழைத்துச்செல்ல
மனம் வரவில்லையோ
கருவறையில் சுமந்தவளோ சமயலறையில்
தோளில் சுமந்தவனோ தோட்டத்தில் ...
குருதியை பாலாய் கொடுத்தவளுக்கு உணவளிக்கவில்லை
ஆனால் பாசம் விட்டு பகட்டுக்காக
தானம் செய்கிறான் -கானல் உலகில்
பணவெறி கொண்டவனுக்கு ஈன்றவரின்
கண்ணீர் கூட வியர்வையாய் தோன்றும்
"உயிரிருக்கும் வரை காதல் " மாறி
உயிலிருக்கும் வரை மகனில்லம்
இழப்பின் முதியோர் இல்லம்
பணத்தை அடகு வைத்தாவது பாசத்தை
பெற ஏங்கும் முதியோர்கள் - இதை
காணுகையில் நெஞ்சம் பொறுக்குதில்லையே ......