ஒரு நிலவைத்தான் பார்த்தேன்

ஆயிரம் எழுதிவிட்டேன்
கவிதைகள் இன்னும் அலுக்கவில்லை
ஆயிரம் தரிசித்துவிட்டேன்
மலர்கள் இன்னும் அலுக்கவில்லை
ஆயிரம் பார்த்துவிட்டேன்
நட்ச்த்திரங்கள் கண்சிமிட்ட மறக்கவில்லை
ஒரு நிலவைத்தான் பார்த்தேன்
காதலும் கவிதையும் தர மறுப்பதில்லை
ஒரு புத்தகம்தான் உனைப் பற்றி எழுதத் துவங்கினேன்
பக்கங்கள் தொடர்கின்றன முடியவில்லை !

~~~கல்பனா பாரதி~~~













~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (26-Mar-15, 10:18 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 102

மேலே