செம்மரம்

தமிழர்களின் குருதியில் நனைந்ததாலோ
செம்மரம் என பெயர் கொண்டாயோ...!

விலை கொடுத்து உன்னை வாங்குவதாலோ
விலை மதிப்பற்ற எங்கள் உயிர்களை உரமாக்கினாயோ...!

சூடு சொரணையற்று இருக்கிறோமென
அண்டை இனத்தின் இன வெறியை சுட்டு எங்களுக்கு உணர்த்தினாயோ...!

எழுதியவர் : அருண் வேந்தன் (10-Apr-15, 12:40 pm)
சேர்த்தது : அருண்வேந்தன்
பார்வை : 135

மேலே