தேவி துதி 3 கலைவாணி
நாவினில் இனிமை நல்லவன் போலுரைப்பான்
நச்சினை நெஞ்சினில் வைத்துத் திரிவான்
நல்லதோர் வீணை தனைமீட்டி இன்சுர
நாதத்தால் இவன்கருத்து திருத்துவாய் கலைவாணியே !
கவின் சாரலன்
கருத்தினில் வையுங்கள் கருத்தினில் வைய்யாதவர்களையும்
கருத்தினில் வைபவர்களையும் கருணையினால்
திருத்துவது அவள் அறம் .
அது நாத வீணையின் ஏழு சுரம் செய்யும் மாயம்