சக்தி வேல்

எந்நாளும் உன்பேர் சொன்னாலே போதும்
....என்வாழ்வு மிங்கே எழிலாகும்
பொன்னாரம் பூண்ட மின்னாடும் மேனி
...என்வாழ்வைச் சேர்ந்த அருளாகும்
செந்தாழம் பூவைக் கண்டாடும் கொங்கை
....கொண்டாளே தாயே உமையாளே
உன்னாசி அன்றி வேறெந்த ஜோதி
....என்பாவைக் காக்கும் ஒளியோசொல் !
சிந்தோடு சந்தம் வந்தாடும் வண்ணம்
....என்னோடு நல்கு தமிழாறை
முன்னோர்கள் போற்ற முன்னேகி நானும்
....பொன்னான பாக்கள் பலபாடக்
கந்தோனின் கையில் அன்றோர்நாள் தாயே
....தந்தாயே வேலை அதுபோலே
உன்சேயா மென்றன் கையோடு நீயும்
....தந்தாலே போதும் கவிவேலை !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (2-May-15, 8:57 pm)
பார்வை : 109

மேலே